பொதுவைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி விழா எதிர்வரும் 19.09.2012 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறப்புற கொண்டாடப்பட இருப்பதை விநாயகர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் பூஜைகளின் பின் விநாயகர் பின்வரும் வீதிகள் ஊடாக நகர்வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். அத்தருணம் தங்கள் இல்லங்களில் பூரண கும்பம் வைத்து விநாயகப்பொருமானின் அருளைப் பெறுமாறு வேண்டப்படுகிறீன்றீர்கள்.
ஆலயத்தில் இருந்து புறப்படும் விநாயகர் ஊர்வலம் டைக் வீதி, நீதிமன்றவீதி, நாகராசா வளவு, (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்), ரெசிடென்வீதி, (சிற்றூழியர் விடுதிவீதி), வைரவர் கோவிலடி, கடற்கரை வல்லவசக்தி அம்பாள் ஆலயம், நீதிமன்ற வீதி, முனியப்பர் ஆலயம், பாத்திமாவீதி, கந்தசாமி கோவில், சுங்கவீதி, நீதிமன்றவீதி, தபால்கந்தோர் வீதி, கிறீன்வீதி, கல்லூரிவீதி, காளிகோவிலடி, டொக்கியாட்வீதி. டைக்வீதி, மீண்டும் டொக்கியாட்வீதி, வைத்தியசாலைவீதி ஊடாக ஆலயம் வந்தடையும்.
ஆலய நிர்வாகத்தினர்
பொது வைத்தியசாலை
திருகோணமலை
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர்
No comments:
Post a Comment