ஆன்மீகம்,ஆய்வுகள்,ஓவியங்கள்,சஞ்சிகை வெளியீடுகள்,சிறப்புக் கட்டுரைகள்,சிறுவர் பாடல்கள்,சிறுவர்களுக்கான கதைகள்,பத்திரிகைப் பதிப்புக்கள்,புகைப்படச் சேகரிப்புக்கள்,மனையியல் என்று பல்சுவைகளைத் தாங்கி திருகோணமலையில் இருந்து வரும் வலைப்பதிவு பொதிகை.
பொதிகை - வலைப்பதிவு ஆசிரியர் பக்கம்
வலைப்பதிவுக்குப் பொதிகை எனப் பெயர் சூட்டக் காரணம்
தமிழ் வளர்ந்த இடமாகக் கருதப்படும் பொதிகை மலையின் மகிமை கருதியும், அங்கு தமிழை வளர்த்த மாமுனிவரின் சிறப்புக் கருதியும், அகத்திய மாமுனிவருக்கும் தெட்ஷணகைலாயம் எனப் போற்றப்படும் திருக்கோணேஸ்வரத்துக்கும் உள்ள தொடர்பினைக் கருத்தில் கொண்டே எமது வலைப்பதிவு பொதிகை எனப் பெயர் பெறுகின்றது.
தமிழ் மொழியில் முதலில் தோன்றிய நூலாக அகத்தியம் விளங்குகின்றது. சிவனின் ஆணைப்படி தென்கைலைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கியிருந்த பொழுது முருகப்பெருமானின் அருள் வாக்குக்கு இணங்க இந் நூலை இயற்றி அருளி அதற்கு இலக்கணமும் வகுத்தார். இத் தெய்வத் தமிழ் மொழி வளர்ந்த இடம் பொதிகை. இதனைக் கருத்தில் கொண்டும் எமது இணையத்தளம் பொதிகை எனப் பெயர் பெறுகின்றது.
எமது வலைப்பதிவு 02.09.2009 முதல் பொதிகை எனும் பெயர் தாங்கி அமிழ்தினும் இனிய தமிழ் விரும்பும் அன்பர்களாகிய உங்களுடன் பொதிகைமலைத் தென்றலாக இணைய வலைப்பின்னலின் ஊடாக வீசுகின்றது.
பொதிகை - வலைப்பதிவு சுட்டி
http://pothikai.wordpress.com/
No comments:
Post a Comment