புகைப்படங்கள்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆலய தரிசனம்

சிறுவர் பாடல்

கவிதை

ஞாபகச்சிதறல்

வரலாற்றுப் புதையல்

கதை

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்

ரங்கநாயகியின் காதலன்

தமிழ் கேட்க ஆசை

விருந்தினர் பதிவு

Wednesday, August 12, 2009

ஓராண்டு நிறைவில் ஜீவநதி



ஜீவநதி வலைப்பூவிற்கு ஓராண்டு (13.08.2009) நிறைவடைகிறது. நேரங்கிடைக்கையில் நிறைய ஞாபகங்களை மீட்கவேண்டி இருக்கிறது. இந்த ஒருவருட காலத்தில் என்னைச் சுற்றி நிறைய நடந்துவிட்டிருக்கிறது.


பல நல்ல உள்ளங்களின் இணைவிற்கு காரணமாக இருந்து, துயர்நிறைந்த நாட்களில் நல்லதொரு தோழனாகச் செயற்பட்டது இந்த இணைய ஊடகம்.



பணிகாரணமாகவும், இங்குள்ள நிலை காரணமாகவும் பதிவிடுதலில் இருந்த தொடர்ச்சியற்றதன்மையையும் மீறி நிறைய அன்புள்ளங்களைச் சம்பாதிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.


தங்களது எண்ணப்பகிர்வுகள் மூலம் தொடர்ந்தும் உற்சாகமூட்டிவரும் பதிவுலக நண்பர்களுக்கும், இணைய வாசகர்களுக்கும் இணைப்புப்பாலமாகச் செயற்படும் திரட்டிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



நட்புடன் ஜீவன்.
11.08.2009





இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் வாழ்க்கையில் எல்லாம் இனிதே நடைபெற என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ரேணுகா ஸ்ரீநிவாசன்August 13, 2009 at 12:08 AM

    ஜீவநதியின் ஓராண்டு நிறைவு நாள் இன்று (13.08.2009.குறுகிய காலத்துள் ஜீவநதியுடனான என் தொடர்பின் நினைவினை மீட்டிப் பார்க்கிறேன். எம்மவர் வாழ்வில் மிகவும் கொடுமையான மறக்கமுடியாத காலங்களில் என்னை ஓரளவாவது அமைதிப்படுத்தும் ஒரு இணையத் தொடர்பாக இருந்த ஜீவநதிக்கு நன்றிகள்.
    இயற்கையின் எழில் கொஞ்சும் அழகினையும்,மருத்துவம் மற்றும் சமகால எம்மவர் பிரச்சினைகள், துயரங்கள், எம்முன் நீண்டிருக்கும் கடமைகள் என எல்லாவற்றையும் எம் கண்முன் கொண்டுவரும் ஜீவநதி தொடர்ந்து தங்கு தடையின்றிப் பிரவாகித்துப் பாய்ந்தோட என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களிலும் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...