செல்வி தேவரஞ்சனி சிவபுண்ணியம் முப்பத்து ஆறு வருட அரச கல்வி சேவையில் இருந்து (22.09.2012) ஓய்வு பெறுகின்றார். குச்சவெளியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது இறுதி அரச சேவையை தான் கல்வி கற்ற குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தன் அதிபராக இருந்து 21.09.2012 இல் நிறைவு செய்துள்ளார்.
01.091976ஆம் வருடம் உதவி ஆசியரியராக அரச நியமனம் பெற்ற இவர் குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயம். புதுக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை, திரியாய் மகா வித்தியாலயம். மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, நிலாவெளி மகா வித்தியாலயம் என்பனவற்றில் ஆசிரியராக சேவையாற்றி உள்ளார். 16.10.1996 கடமை நிறைவேற்று அதிபராக பதவி ஏற்ற இவர் 14.08.2000 ஆம் வருடம் இலங்கை அதிபர் சேவை தரம் 2 -2 நியமனம் பெற்றிருந்தார்.
20 வருடங்கள் ஆசிரியராகவும். 16 வருடங்கள் அதிபராகவும் சேவையாற்றிய இவர் பலரது பாரட்டுதலையும் பெற்றிருந்தார்.
1999அம் வருடம் க.பொ.த.சாதாரண தரம் பரீட்சையில் தனது பாடசாலை மாணவர்கைள 100 வீதம் சித்தியடைய வைத்த கிழக்கு மாகாண ஆளுநரின் விருதினையும் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment